காக்கும் காவல் தெய்வங்கள்
நாகரீகம் என்னும் பெயரில் நாம் நம் வரலாறுகளை, கதைகளை மறந்து கொண்டு வருகிறோம். சாமிகளை ஆன்மீகம் எனும் வட்டத்திற்குள் அடைத்து, அந்த கதைகளை மூட நம்பிக்கையாக கருதும் இளைய சமுதாயத்திடம் காத்திரமான இந்த கதைகளை கொண்டு சேர்க்கும் முயற்சியின் ஒரு சிறு துளியே "காக்கும் காவல் தெய்வங்கள் " எனும் இந்த தொடர்.

காக்கும் காவல் தெய்வங்கள்காக்கும் காவல் தெய்வங்கள் பற்றிய கதை
தமிழர் நாகரிகமும் பண்பாடும்:
தமிழ் பாரம்பரியம் பல ஆயிரம் கதைகளை தன்னுள் சுமந்து கொண்டு உள்ளது. அவை மூலம் உயிர்ப்பு மிக்க நாகரீகம், தமிழ் நாகரீகம் என்பது நமக்கு தெரிய வருகின்றது. தமிழ் பாரம்பரியத்தை உணர்ந்து கொள்ள வேண்டும் எனில் இருப்பதிலேயே பழமையான ஆதாரமான தொல்காப்பியம் தான் இன்று வரை நம் கையில் இருக்கும் ஒரே புதையல். ஆதியில் தமிழர்கள் மலைவாழ் குடிகளாக இருந்தனர். அவர்களின் வழிபாடு திணை வழிபாடாக இருந்தது. நான்கு திணைகளுக்கு நான்கு கடவுள்கள் என வணங்கி வந்தனர். அவர்களில் பிரதானமான குறிஞ்சி நில கடவுளான முருகர் இன்று தமிழ் கடவுளாக இந்த மாநிலமெங்கும் போற்றப்படுகிறார்.
