மண் பானைகளில் தெரியாத சுவாரஸ்யமான உண்மைகள்

 

 

மண் பானைகளில் தெரியாத உண்மைகள்

 


 

 

 

நீர்- 7- 8 pH அளவு"


இரத்தத்தில் pH அளவும் எலும்பு/மூட்டு வலியும்...!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மருத்துவர்கள் கூறும் காரணங்கள்

 

 

மூட்டு எலும்பு வலிக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மருத்துவர்கள் சொல்வது மூட்டு தேய்ந்து விட்டது, கால்சியம் குறைந்து விட்டது, எலும்புஅடர்த்திக் குறைந்து விட்டது என்பதுதான்.

இயல்பாக இரத்தத்தின் pH அளவு 7.4 ஆகும். (pH என்பது "potential of Hydrogen"). ஒரு பொருள் 7 இதற்கு கீழ் pH அளவு இருந்தால் அந்தப்பொருள் அமில தன்மை உடையது.(Acid).

ஒரு பொருள் 7 இதற்கு மேல் pH அளவு இருந்தால் அந்தப் பொருள் காரத்தன்மை உடையது.(Alkaline)

 

நமது இரத்தம் pH அளவு.

நமது இரத்தம் இயல்பாகக் காரத்தன்மை உடையது. இரத்தம் 7.4 pH அளவு உடையது...! 

ஆனால் நாம் அருந்தும் பெரும்பாலான குளிர்பானங்கள் அமிலத்தன்மை உடையவை. 

அதாவது pH அளவு என்பது பெரும்பாலும் 5 விடக் கீழாக இருக்கும். இந்தக் குளிர்பானங்களை அருந்தும் போது நமது இரத்தமானது அதன் இயல்பானகாரத்தன்மையை இழந்து அமிலத்தன்மையாக மாறும். 

இது தொடர்ந்து நடக்கும் போது இரத்தம் அமிலத்தன்மையை அடையும். 

இது பல்வேறு உடல்நலக் கேடுகளுக்கு வழிவகுக்கும். எனவே இதைத் தடுக்கும் பொருட்டு உடலானது இரத்தத்தைக் காரத்தன்மையாக மற்ற முயலும். 

 

இரத்தத்தைக் காரத்தன்மை உடையதாக மாற்ற கூடிய பொருள் கால்சியம். எனவே...! 

இந்த எலும்பு மற்றும் மூட்டுகளில் உள்ள கால்சியம் ஆனது ionized கால்சியம் ஆக மாற்ற பட்டு நமது இரத்தத்தில் கலக்கிறது.

இப்போது இரத்தம் இயல்பான காரத்தன்மை அடைகிறது.

இவ்வாறு எப்போதெல்லாம் இரத்தம் அமிலத்தன்மை உடையதாக மாறுகிறதோ அப்போதெல்லாம் கால்சியம் எலும்பு மூட்டுகளில் இருந்து பிரிந்து இரத்தத்தில் கலந்து அதைக் காரத்தன்மை உடையதாக மாற்றுகிறது. 

எனவே எலும்பு, மூட்டுகள் வலுவிழக்கிறது. கடுமையான வலி உண்டாகிறது

இப்போது எந்த அளவு pH ஆனது கீழ்கண்ட பொருட்களில் இருக்கிறது என்று கூகுளில் தேடி பார்த்தபோது கீழ்கண்ட அளவீடுகள் கிடைத்தன. 

 


குளிர்பானங்கள் - 2.3 - 3.5 pH அளவு. 

R.O.WATER - 5 - 6 pH அளவு 

காபி - 4.5 - 5.5 pH அளவு 

மண்பானை நீர் - 7- 8 pH அளவு. 

 

R.O.WATER ஆபத்தானது 

 

 

 

R.O. WATER - என்பது நாம் வீடுகளில் பெருமையாக நினைத்து பயன்படுத்தும் தண்ணீர் சுத்திகரிக்கும் கருவி. தற்காலங்களில் பெரும்பாலானவீடுகளில் இந்தக் கருவிகள் பொருத்தப்பட்டுத் தண்ணீரை சுத்திகரிப்பதாய் நினைத்து மூட்டுவலியை விலை கொடுத்து வாங்குகிறார்கள். 

நீங்கள் குடிக்கும் அத்தனை குளிர்பானங்களும் மூட்டுவலிக்கு ஒரு காரணமாய் அமைகிறது . 

இப்போது மண்பானை நீர் எவ்வளவு பாதுகாப்பானது என்று உங்களுக்குத் தெரிய வரும். ஏன் என்றால் மண்பானை நீர் pH அளவு 7- 8 ஆகும். 

கார்போரேட்டுகள் திட்டமிட்டு விளம்பரம் செய்து நம்மிடையே குளிர்பானங்களை விற்கிறார்கள். 

அதுபோல் தண்ணீர் சுத்தமில்லை என்ற எண்ணத்தை மனதில் விதைத்து நீர் சுத்திகரிப்பு கருவியை விற்று நமக்கு நோயை பரப்புகிறார்கள். 

பின்னர் அவர்களே அந்த நோய்க்கு மருந்தை விற்பார்கள். 

இந்தச் சுழற்சி வலையை விட்டு வெளியில் வந்தால் மட்டுமே உங்களுக்கு நோய் குணமாகும்...! 

சமுதாய நலனில் 

என்றும் அன்புடன்: . மண்பானை 

களிமண் பானை, RO நீர் சுத்திகரிப்புச் செப்புப் பாத்திரங்கள் பற்றித் தொடர்புடைய வலைப்பதிவில் ஆய்வுசெய்துள்ளோம் 

களிமண் பானை நீரின் வெப்பத்தைக் குறைக்கிறது மற்றும் நல்ல மற்றும் கெட்ட பாக்டீரியாக்கள் தண்ணீரில் தங்கியிருக்கின்றன 

ஆனால் RO நல்ல மற்றும் கெட்ட பாக்டீரியாக்களை வடிகட்டுகிறது மற்றும் செப்பு நாளங்கள் வினைபுரிந்து பாக்டீரியாவின் சுவரை உடைத்து அழிக்கின்றன

 


மண் பானைகளில் செய்யப்பட்ட உணவுகள் எங்கள் சுவை 

மிக்கததாக இருக்கிறது